
புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமையால் சிறுமிதற்கொலை செய்து கொண்ட வழக்கில் தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா (34). இவர் கணவரைப் பிரிந்துதனது 11 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதன்பின்பு, சேங்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன்(32) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.இந்நிலையில், சூரியகலாவின்மகளுக்கு தூக்க மாத்திரைகளைகுளிர்பானத்தில் கலந்துகொடுத்து, பாலியல் வன்கொடுமையில் கணேசன் ஈடுபட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oGNjtCv
0 Comments