Crime

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் கடந்த 5 நாட்களுக்கு முன் 17 வயது மைனர் பெண் மீது நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 5வது குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ்பகுதி என்பது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு பகுதியாகும். இங்கு, கடந்த மாதம் 28-ம் தேதி 17 வயது மைனர் இளம்பெண் ஒருவர் ‘பப்’ க்கு வந்தார். பின்னர் வீடு திரும்புகையில், அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி விலை உயர்ந்த 2 கார்களில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை அழைத்துக்கொண்டு, அந்த காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த செயலில் ஆளும் கட்சியை சேர்ந்தஎம்.எல்.ஏவின் மகன், கவுன்சிலரின்மகன் உட்பட 6 பேர் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LOqypHP

Post a Comment

0 Comments