Crime

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (50). தொழிலதிபர். கோவை மற்றும் ஈரோட்டில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது ஈரோடு நிறுவனத்தில் பவானி பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர், குடும்பத் தகராறு காரணமாக, கணவரைப் பிரிந்து வசித்து வந்தார். கடந்த 29-ம் தேதி ஆர்.எஸ்.புரம் கன்னுசாமி வீதியில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்த அந்த பெண், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, தொழிலதிபர் நவநீதன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் முறை கர்ப்பமடைந்து, நவநீதன் மிரட்டியதால் கலைத்ததாகவும் அப்பெண் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eHJFECU

Post a Comment

0 Comments