
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, கந்திலி, ஜோலார்பேட்டை, உமராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாக்கெட் சாராய விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர மது விலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 287 லிட்டர் சாராயத்தை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1HnRtE8
0 Comments