
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பாண்டியன்(58). இவர், தனது குடும்பத்தினருடன் மே 8-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பாண்டியனை இரும்புக் கம்பியால் தாக்கி வீட்டிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்பிலான காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ho6CpXl
0 Comments