Crime

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. இவரும் பக்கத்து கிராமம் கன்பூரை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் காதலித்தனர். இருவரும் கடந்த ஜனவரி 31-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

விசாகப்பட்டினத்தில் 2 மாதம் தலைமறைவாக இருந்த தம்பதியினர், 10 நாட்களுக்கு முன் ஹைதராபாத் வந்தனர். கடந்த 4-ம் தேதி சரூர்நகர் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்ற இந்த ஜோடியை, அஷ்ரினின் அண்ணன் சையத் மோபின் அகமது, அவரது நண்பர் மசூத் அகமது ஆகிய இருவரும் நாகராஜுவை அடித்துக் கொன்றனர். இதுதொடர்பாக சையது மோபின், மசூத் அகமது ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBMKRpO

Post a Comment

0 Comments