Crime

மதுரை: மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணாராம்(70). இவரது மனைவி பங்கஜவல்லி(65). அதே பகுதியில் இவர்களுக்கு பல கோடிரூபாய் மதிப்புள்ள வீடுகள், கடைகள் உள்ளன. இவர்களுக்கு குழந்தைஇல்லாததால், 20 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

கடந்த ஆண்டு இவரது வளர்ப்புமகள் வாகன ஓட்டுநர் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.பின்புசில நாட்களில் வளர்ப்பு மகளையும், மருமகனையும் கிருஷ்ணாராம் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். மருமகனுக்கு தனது இடத்தில் கிருஷ்ணாராம் பழச்சாறு கடை வைத்துக் கொடுத்துள்ளார். கடையை மருமகன் சரியாக நடத்தாததால் கிருஷ்ணாராம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த நிவேதாவும், அவரதுகணவரும் ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y7ywctx

Post a Comment

0 Comments