
அரியலூர்/கரூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை(21). கார் ஓட்டுநரான இவருக்கு பிளஸ் 2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9.3.21 அன்று அந்த மாணவியை ராஜதுரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இவ்வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், ராஜதுரைக்கு மாணவியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டுகள், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dI3AOXw
0 Comments