Crime

பொள்ளாச்சி - உடுமலை சாலை தேர்நிலையம் அருகே உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வந்த நபர், தன்னை உணவுப் பாதுகாப்பு அதிகாரி என ஊழியர்களிடம் தெரிவித்து, அதற்குரிய அடையாள அட்டையை காண்பித்து, உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உணவக மேலாளர் ஷேக் முகமது (63) பொள்ளாச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்புராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உணவகத்தில் ஆய்வு நடத்திய நபர், போலி ஆசாமி என தெரியவந்தது. அந்நபரை பிடித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yh30oRP

Post a Comment

0 Comments