
ஈரோடு: ஈரோடு அருகே தொழிற்சாலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் கைதான வடமாநில தொழிலாளர்கள் 38 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர். கடந்த 6-ம் தேதி இரவு, நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமோத்ராம் என்ற இளைஞர் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி மோதியதில் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eC4Z2Kw
0 Comments