Crime

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(21). இவர், 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சரண்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த சரண்ராஜ், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qvthsal

Post a Comment

0 Comments