Crime

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (54). சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளை கும்பல் தாளமுத்து நடராஜனை கொலை செய்து, வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயில்தர்சிங் (56) உட்பட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த ஜெயில்தர் சிங் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kLlTJWE

Post a Comment

0 Comments