
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 4 திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.7.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குளில் ஈடுபடுபவர்களை கண்டறியும்பொருட்டு அனைத்து துணை கோட்ட டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி 4 திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KfDHQ97
0 Comments