Crime

திருவள்ளூர்: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு நேற்று முன்தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனிப்படை போலீஸார், கடம்பத்தூர் ரயில்நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த திமோதி, பிரித்திவி, ஸ்ரீராம், ரோஹன் ஆகிய 4 பேரிடம் சோதனையிட்டு 26 போதை மாத்திரைகள், ஒரு கிராம் போதை பவுடர், 26 போதை தரும் வில்லைகளை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hdJATbK

Post a Comment

0 Comments