Crime

சென்னை: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை காணொலி வாயிலாக நடந்தது. அப்போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் காணொலியில் நடந்த விசாரணையின்போது இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்தனர். அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zXhiPMf

Post a Comment

0 Comments