Crime

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் திருடப்பட்ட ரூ.4.29 லட்சத்தை சைபர் கிரைம் போலீஸார் மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் வங்கியில் பான் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். இதையடுத்து வங்கியில் இருந்து அலுவலர் பேசுவதாக கூறிய மர்ம நபர், பான் கார்டு பெறுவதற்காக சில விவரங்கள் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். பின்னர், உமா மகேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண்ணைப் பெற்று, அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 275-யை நூதன முறையில் திருடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ih7Q5sM

Post a Comment

0 Comments