Crime

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் (22) ஒருவர் தஞ்சையில் ஒரு கடையில் பணிபுரிகிறார். இவர், ஏப்.11 இரவு பணி முடிந்து,பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவருடன் பள்ளியில் படித்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன்(25), அப்பெண்ணைஊரில் இறக்கிவிடுவதாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டார்.

சரியான வழியில் செல்லாமல்வேறு பாதையில் சென்ற கொடியரசன் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த அவரது நண்பர்கள் சாமிநாதன்(24), சுகுமாரன் (25),கண்ணன்(25) ஆகியோர் கொடியரசனுடன் சேர்ந்து அந்தப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பின்னர் அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/amn5Wg9

Post a Comment

0 Comments