
சென்னை: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள சென்னை போக்ஸோ நீதிமன்றம், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தை தன்னை 7 வயதில் இருந்து 16 வயது வரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியைஉதவியுடன் சிறார் நீதிக் குழும ஹெல்ப்லைன் எண்ணான 1098-க்கு கடந்த 2020-ல்புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சிறார் நீதிக் குழும உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் கிண்டி அனைத்துமகளிர் போலீஸார் அந்த சிறுமியின் 48 வயதான தந்தை ஆதவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது கடந்த 2020-ல்வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது சிறுமியின் கர்ப்பத்தை கலைத்தகுற்றத்துக்காக சிறுமியின் தாய் வனிதாவையும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MZWbvcX
0 Comments