
சென்னை: வியாபாரியிடம் கஞ்சா கொடுத்து விற்பனை செய்ய வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 போலீஸாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கதொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அயனாவரம் காவல் நிலைய தனிப்படை போலீஸார் முகப்பேரை சேர்ந்த கஞ்சா வியாபாரி திலீப் குமாரை சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சக்திவேல் தன்னிடம் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jC2ODlf
0 Comments