Crime

வேலூர்: வேலூர் அருகே மற்றும் வாலாஜா அருகே ரயிலில் சிக்கி இளைஞர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் கண்டோன்மென்ட் - பென்னாத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள், காட்பாடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா உத்தரவின் பேரில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முரளி மனோகரன் மற்றும் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TERIGbz

Post a Comment

0 Comments