
கோவையில் ஆன்லைன் மூலம் மூவரிடம் மொத்தம் ரூ.5.08 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் ஆண்டனி ராஜேஷ். ஐ.டி நிறுவன ஊழியரான இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில், ‘‘எனது செல்போன் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், எனது வங்கி கணக்கு முடக்கப்படாமல் இருக்க அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதை நம்பி நான் விவரங்களை பதிவிட்டு, ஓடிபி எண்ணையும் பதிவிட்டேன். சிறிது நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.25 லட்சம் தொகை எடுக்கப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1bVjs9X
0 Comments