
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலமாக பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், பேசியும் அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முதலில் கைதானகிருத்திகா ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VI84mqK
0 Comments