
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி செட்டிமாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (24) ஓட்டுநர், இவர் 17 வயது சிறுமியை கடத்திச் பாலியல் தொந்தரவு செய்ததாக. சிறு மியின் பெற்றோர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NYvnkL3
0 Comments