
ஈரோடு: இணையம் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதாகக் கூறி இளைஞரிடம் ரூ.2.54 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஈரோடு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுதர்சன் (20). சமூக வலைதளங்கள் மூலம் சுதர்சன் வேலை தேடி வந்த நிலையில், இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை இயக்கியவர்கள், நாங்கள் சொல்லும் பொருட்களை விற்பனை செய்தால், கமிஷன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0FNsMqd
0 Comments