
கோவையில் வாங்கிய கடனை திருப்பி தராத சலூன் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்து முன்னணி நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தெலுங்குபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார்(37). அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்புதூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ராம்ஜி(47) என்பவர் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பைனான்ஸியர் இளங்கோவிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், சசிகுமார் தொகையை திருப்பித் தரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KRbS1NU
0 Comments