
பனையூர்: ஈசிஆர் ரிசார்ட்டில் போதை விருந்து நடந்ததாக எழுந்த புகாரில் 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இசை நிகழ்ச்சி மற்றும் போதை விருந்து நடந்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில் மது விலக்கு போலீஸார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் அங்குச் சோதனை செய்ததில் போதை பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rdAleW5
0 Comments