
சென்னை: சென்னை, கொண்டித்தோப்பு, ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் ரத்னாதேவி (59). இவர் கடந்த 17-ம் தேதி மதியம் ஏழுகிணறு, படவட்டம்மன் கோயில், பெத்து நாயக்கன்தெரு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையன் ஒருவர் ரத்னாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
அதிர்ச்சி அடைந்த ரத்னாதேவி, இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையில் ரத்னாதேவியின் தங்கச்சங்கிலியை பறித்து தப்பியது சென்னை, மண்ணடி மரக்காயர் தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KpoJbCW
0 Comments