
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, அதிமுக பிரமுகர் வீட்டில் 117 பவுன் நகைகள், ரூ.2.25 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்களைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.நேற்று அதிகாலை பாலமுருகன்மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சொகுசு காரில் வந்த,ஒரு பெண் உட்பட 7 மர்ம நபர்கள் வீட்டின் கதவைத் தட்டி, தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rq21PaG
0 Comments