Crime

வேலூர் மாவட்டம் காட்பாடி-குடியாத்தம் சாலையில் கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒரு கும்பல் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்தனர்.

அந்த நேரத்தில் கடைக்கு வெளியே நின்றிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று அங்கிருந்த இரு சக்கர வாகனம்ஒன்றை இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் குடியாத்தம் நோக்கி பறந்து சென்றது. இதைப்பார்த்த காவல் துறையினர் அந்த காரை விரட்டிச் சென்றனர். அந்த கார் எல்.ஜி புதூர் அருகே சென்றதும் சாலையோரத்தில் நின்றது. காரில் இருந்த இரண்டு பேர் இறங்கி ஊருக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டியதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G2Ua6eL

Post a Comment

0 Comments