
திருவண்ணாமலை – மணலூர் பேட்டை சாலையில் வழிப்பறி கும்பல் மீது நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை – மணலூர் பேட்டை சாலையில் தொடர் வழிப்பறி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் இரவு முதல் அதிகாலை வரை சரக்கு வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை வழி மறித்து, கத்தியை காண்பித்து மிரட்டி பணம், செல்போன் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/euVbcKq
0 Comments