Crime

வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனுவாசன் (எ) மூர்த்தி (31). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ம் தேதி வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை சேந்தநத்தம் சுடுகாட்டில் உள்ள சிமெண்ட் தரையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சீனிவாசன் சேந்தநத்தம் சாராய கடைக்கு மது குடிக்க சென்ற போது, சீனிவாசனை 2 பேர் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சாராய பாட்டிலால் குத்தியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் பணத்தைபறித்து விட்டு தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EVIcaZM

Post a Comment

0 Comments