
திருப்பத்தூர்: ஓய்வு பெற்ற கடற்படை வீரர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் நகரம் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம்(58). ஓய்வு பெற்ற கடற்படை வீரர். இவரது மனைவி சாந்தி (50). இவர், கந்திலி சுகாதாரத்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் கீழே சிதறிக் கிடந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nDhbsU
0 Comments