Crime

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கார்களில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை நாகையில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனர். மேலும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வரஉள்ளதாகவும், அதை வேட்டைக்காரனிருப்பு புதுப்பள்ளி பாலம்அருகில் பெற்று, பின்னர் இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் நாகை மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fCmhkJ

Post a Comment

0 Comments