
சங்கராபுரம் அருகே இரு பிரிவினரி டையே ஏற்பட்ட மோதலின் போது பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் கேன்களை ஏற்றுவதற்காக வாகனம் வந்துள்ளது. அப்போது வாகனம் வரும் வழியில் இளைஞர்கள் சிலர் நின்றிருந்ததால், அவர்களை சற்று தள்ளி நிற்குமாறு ரமேஷ் கூறியதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ny2C9Y
0 Comments