Crime

கோவை: கோவை ஆனைமலையை அடுத்த ஒடையகுளத்தை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (32). இவர், கம்ப்யூட்டர், பிரின்ட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.85,000 கடன் பெற்றுள்ளார். தொழிலை விரிவுபடுத்தியும் போதிய வருவாய் கிடைக்கவில்லை. கடனை திருப்பி அடைக்க முடியாமல், ரவிபிரகாஷ் திண்டாடினார்.

கடந்த 2016 செப்டம்பர் 23-ம் தேதி ஒடையகுளம் சவுடம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த தனது பெரியம்மா அருக்காணி என்ற அருக்காத்தாளை, ரவிபிரகாஷ் கொலை செய்தார். அவர் அணிந்திருந்த கம்மல், தாலிக்கொடி என 7 பவுன் நகைகளை திருடிவிட்டு, ரவிபிரகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். அந்த நகைகளை அடமானம் வைத்து ரவிபிரகாஷ் கடனை அடைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FPugXj

Post a Comment

0 Comments