
திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் ஆமீன்புரம் 12-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா(66). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 மகன்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இவரது 4-வது மகன் அப்துல் ரகுமான் (27), எந்த வேலைக்கும் செல்லாமல் இரு ந்துள்ளார். மேலும் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வந்த அப்துல்லாவிடம் பணம் கேட்டு அப்துல் ரகுமான் தகராறு செய்துள்ளார். பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். அதிகாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கிரைண்டர் கல்லைப் போட்டு அப்துல் ரகுமான் கொலை செய்யப்பட்டார். மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து அப்துல்லாவை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pwBn0O
0 Comments