
குமரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.9 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 77 செல்போன்கள் சைபர் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் எஸ்.பி. பத்ரிநாராயணன் ஒப்படைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: நடப்பாண்டில் சுமார் ரூ.64 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 540 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஆதாய கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 25 கொலை வழக்குகளில் தொடர்புடைய 48 குற்றவாளிகளும், கொலை முயற்சி தொடர்பாக 78 பேரும், அடிதடி வழக்குகள் தொடர்பாக 334 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EJE1Vg
0 Comments