Crime

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செல்வக்குமார்(46). இவர், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் செல்வக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், செல்வக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிரி, குற்றம்சாட்டப்பட்ட செல்வக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, செல்வக்குமாரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32NM7iG

Post a Comment

0 Comments