
கோவை: திருப்பூரில் அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, நிதி நிறுவனம் என்ற பெயரில் ரூ.12.66 லட்சம் மோசடி செய்த மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கு பிடிவாரன்ட் பிறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த லக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் சாமிநாதன், முத்துவேல், மணிவேல், ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி. இவர்கள் கூட்டாக இணைந்து 'குபேரா ஆட்டோ ஃபைனான்ஸ்' என்ற நிறுவனத்தை 2010 முதல் நடத்தி வந்துள்ளனர். முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்ததை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 பேர் மொத்தம் ரூ.12.66 லட்சம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அசல், வட்டித் தொகை அளிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qprMIu
0 Comments