Crime

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவியாக பொறுப்பு வகிப்பவர் சுவேதா(40). இவரது கணவர் கணேசன்(45). இவர் மீது கோவை மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாநகராட்சி ஊழியர் போல் நாடகமாடி மூதாட்டியிடம் 4 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய வழக்கில் கணேசனுக்கு முக்கிய தொடர்பு இருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3F74a1g

Post a Comment

0 Comments