
எட்டயபுரம் அருகே கடத்தலுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட 1.3 டன் விரலி மஞ்சள் மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதை ஆகியவற்றுக்கு 100 சதவீத இறக்குமதி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் சுங்க வரி ஏய்ப்புக்காகவும் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகவும் தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதியில் இருந்து விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதைகள் உள்ளிட்டவையும், அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி இலைகள் ஆகியவற்றையும் படகுகளில் கடத்த முயல்வதும், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30FLDKl
0 Comments