
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் சேலம் நகை வியாபாரிகள் நான்கு பேரிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி நகைகள், ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று நள்ளிரவு (ஜூலை 08) கேரள மாநிலம் கொல்லம் நோக்கிப் புறப்பட்ட விரைவு ரயில் இன்று (ஜூலை 09) அதிகாலை காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோட்ட ரயில்வே குற்ற புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி, துணை உதவி ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hT3H8M
0 Comments