
மதுரையிலிருந்து கோவைக்கு காரில் கடத்திய 904 டாஸ்மாக் மது பாட்டில்களை குண்டடம் அருகே போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்தனர்.
கரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்த காரணத்தால் பொதுப் போக்குவரத்து, மளிகை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மளிகைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Abn8Sq
0 Comments