
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர், ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் யுவன் (4). அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரது மகள் சண்முகப்பிரியா (5). கண்ணன் என்பவரது மகன் இஷாந்த் (5). இவர்கள் 3 பேரும் உறவினர்கள். நேற்று மாலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அருகில் உள்ள குளத்துக்கு சென்று நீரில் இறங்கி விளையாடியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yaxOis
0 Comments