
மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை மாவட்ட எஸ்.பி. உதவியுடன் துணிச்சலாக நிறுத்திய நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை பாண்டியகோயில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பெற்றோர் திருமணம் செய்துவைப்பதிலேயே உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமி எப்படியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் தொடர்பு எண்ணைப் பெற்றிருக்கிறார். அந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தான் படிக்கவேண்டும் ஆகையால் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்தை உடனடியாக நிறுத்துமாறு வேண்டியுள்ளார்.
மாவட்ட எஸ்.பி.யும் புகாரின் முக்கியத்துவத்தை அறிந்து உடனடியாக அதனை மாநகர காவல் சரகத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vzbZHr
0 Comments