
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இச்சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 7 பேர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல் ஜெயிலர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதி கேட்டு 3 இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cBMpef
0 Comments