
தோழியான யோகா ஆசிரியரைக் கொன்று குளியலறைக்குள் புதைத்த வழக்கறிஞர், 20 நாட்களுக்குப் பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46). வழக்கறிஞரான இவர், சிலம்பம் கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருந்தார். வழக்கறிஞர் தொழிலுடன் வீட்டில் சிறுவர், சிறுமியர்களுக்குச் சிலம்பப் பயிற்சியும் அளித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஹரிபிரியா (11) என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவர், மகளை விட்டுப் பிரிந்து, முனிச்சாலையிலுள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b0noc5
0 Comments