Crime

சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரூ.352.3 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை சென்னை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மோசடியில் ஈடுபடும் நபர்களை ஜிஎஸ்டி ஆணையரக அமலாக்கப்பிரிவு கண்காணித்து வருகிறது. இதில் சென்னையில் 24 போலி நிறுவனங்கள் மூலம் போலி ரசீதுகள் தாக்கல் செய்து ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டெக்னிக்கல் பிரிவு உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bdlfcn

Post a Comment

0 Comments