
ஓசூரில் உள்ள பிரபல முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைத் துப்பாக்கி முனையில் 5 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்துப் பணம் பெறுவர். இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை வழக்கம்போல் நிறுவனத்தைத் திறந்த சீனிவாச ராவ் பணியைத் தொடர்ந்தார். இங்கு ஊழியர்கள் பிரசாத், மாருதி ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LTmhS9
0 Comments