
சென்னை வில்லிவாக்கத்தில் முன் விரோதத்தில் வழக்கறிஞர் ஒருவரைப் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், தக்க சமயம் பார்த்து அவரைச் சரமாரியாகத் தலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. சம்பவ இடத்தில கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் மேட்டுத்தெருவில் வசித்தவர் ராஜேஷ் (38). இவர் வழக்கறிஞர். இவரது மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்கின்ற பெயரில் கட்சி ஒன்றினை நடத்தி வருகிறார். அந்தக் கட்சிக்கு ஆலோசகராக ராஜேஷ் இருந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34rXxpq
0 Comments